தேடல்


2:4
2:4 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِمَۤا எதை اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு وَمَاۤ இன்னும் எதை اُنْزِلَ இறக்கப்பட்டது مِنْ இருந்து قَبْلِكَۚ உமக்கு முன்னர் وَبِالْاٰخِرَةِ இன்னும் மறுமையை هُمْ அவர்கள் يُوْقِنُوْنَؕ‏ உறுதி கொள்வார்கள்
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:85
2:85 ثُمَّ اَنْتُمْ هٰۤؤُلَآءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِيْقًا مِّنْكُمْ مِّنْ دِيَارِهِمْ تَظٰهَرُوْنَ عَلَيْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِؕ وَاِنْ يَّاْتُوْكُمْ اُسٰرٰى تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَیْكُمْ اِخْرَاجُهُمْ‌ؕ اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ‌ۚ فَمَا جَزَآءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْکُمْ اِلَّا خِزْىٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يُرَدُّوْنَ اِلٰٓى اَشَدِّ الْعَذَابِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
ثُمَّ பிறகு اَنْـتُمْ நீங்கள் هٰۤؤُلَآءِ ஓ இவர்களே تَقْتُلُوْنَ கொன்றீர்கள் اَنْفُسَكُمْ உங்களை وَتُخْرِجُوْنَ இன்னும் வெளியேற்றுகிறீர்கள் فَرِيْقًا ஒரு பிரிவினரை مِّنْكُمْ உங்களில் مِّنْ இருந்து دِيَارِهِمْ இல்லங்கள்/ அவர்களுடைய تَظٰهَرُوْنَ உதவுகிறீர்கள் عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக بِالْاِثْمِ பாவமாக وَالْعُدْوَانِؕ இன்னும் அநியாயம் وَاِنْ يَّاْتُوْكُمْ அவர்கள் வந்தால்/உங்களிடம் اُسٰرٰى கைதிகளாக تُفٰدُوْهُمْ ஈடுகொடுத்து மீட்கிறீர்கள்/அவர்களை وَهُوَ அதுவோ مُحَرَّمٌ தடுக்கப்பட்டது عَلَیْكُمْ உங்கள் மீது اِخْرَاجُهُمْ‌ؕ வெளியேற்றுவது/அவர்களை اَفَتُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறீர்கள்? بِبَعْضِ சிலவற்றை الْكِتٰبِ வேதத்தில் وَتَكْفُرُوْنَ இன்னும் நிராகரிக்கிறீர்கள் بِبَعْضٍ‌ۚ சிலவற்றை فَمَا இல்லை جَزَآءُ கூலி مَنْ எவர் يَّفْعَلُ செய்கிறார் ذٰلِكَ அதை مِنْکُمْ உங்களில் اِلَّا தவிர خِزْىٌ இழிவு فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْیَا ۚ இவ்வுலகம் وَيَوْمَ இன்னும் நாளில் الْقِيٰمَةِ மறுமை يُرَدُّوْنَ திருப்பப்படுவார்கள் اِلٰٓى பக்கம் اَشَدِّ மிகக் கடுமையானது الْعَذَابِ‌ؕ வேதனை وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا எதைப் பற்றி تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
2:85. (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
2:86
2:86 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் اشْتَرَوُا வாங்கினார்கள் الْحَيٰوةَ வாழ்க்கையை الدُّنْيَا இவ்வுலக(ம்) بِالْاٰخِرَةِ‌ மறுமைக்குப் பதிலாக فَلَا يُخَفَّفُ எனவே இலேசாக்கப்படாது عَنْهُمُ அவர்களை விட்டு الْعَذَابُ வேதனை وَلَا இன்னும் மாட்டார்கள் هُمْ அவர்கள் يُنْصَرُوْنَ‏ உதவிசெய்யப்பட
2:86. மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
2:94
2:94 قُلْ اِنْ كَانَتْ لَـکُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنْ كَانَتْ இருந்தால் لَـکُمُ உங்களுக்கு الدَّارُ வீடு الْاٰخِرَةُ மறுமை عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடத்தில் خَالِصَةً மட்டும் مِّنْ دُوْنِ النَّاسِ அன்றி/மக்களுக்கு فَتَمَنَّوُا விரும்புங்கள் الْمَوْتَ மரணத்தை اِنْ کُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
2:94. (நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக.
2:102
2:102 وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ‌‌ۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ‌ؕ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ‌ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖ‌ؕ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ‌ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‌ؕ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ‌ؕ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏
وَاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினார்கள் مَا எவற்றை تَتْلُوا ஓதின الشَّيٰطِيْنُ ஷைத்தான்கள் عَلٰى இல் مُلْكِ ஆட்சி سُلَيْمٰنَ‌ۚ சுலைமானுடைய وَمَا کَفَرَ நிராகரிக்கவில்லை سُلَيْمٰنُ சுலைமான் وَلٰـكِنَّ எனினும் الشَّيٰـطِيْنَ ஷைத்தான்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் يُعَلِّمُوْنَ கற்பித்தார்கள் النَّاسَ மனிதர்களுக்கு السِّحْرَ சூனியத்தை وَمَآ இன்னும் எவற்றை اُنْزِلَ இறக்கப்பட்டன عَلَى மீது الْمَلَـکَيْنِ இரு வானவர்கள் بِبَابِلَ பாபிலோனில் هَارُوْتَ ஹறாரூத் وَمَارُوْتَ‌ؕ இன்னும் மாரூத் وَمَا يُعَلِّمٰنِ அவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லை مِنْ اَحَدٍ ஒருவருக்கும் حَتّٰى வரை يَقُوْلَاۤ அவ்விருவரும் கூறுவார்கள் اِنَّمَا نَحْنُ நாங்கள் எல்லாம் فِتْنَةٌ ஒரு சோதனை فَلَا تَكْفُرْؕ‌ ஆகவேநிராகரிக்காதே فَيَتَعَلَّمُوْنَ கற்றார்கள் مِنْهُمَا அவ்விருவரிடமிருந்து مَا எதை يُفَرِّقُوْنَ பிரிப்பார்கள் بِهٖ அதன் மூலம் بَيْنَ இடையில் الْمَرْءِ ஆண் وَ زَوْجِهٖ‌ؕ இன்னும் மனைவி / அவனுடைய وَمَا இல்லை هُمْ அவர்கள் بِضَآرِّيْنَ தீங்கிழைப்பவர்களாக بِهٖ அதன் மூலம் مِنْ اَحَدٍ ஒருவருக்கும் اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டே اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய وَيَتَعَلَّمُوْنَ கற்றார்கள் مَا எவற்றை يَضُرُّهُمْ தீங்கிழைக்கும்/அவர்களுக்கு وَلَا يَنْفَعُهُمْ‌ؕ இன்னும் பலனளிக்காது / அவர்களுக்கு وَلَقَدْ இன்னும் திட்டவட்டமாக عَلِمُوْا அறிந்தார்கள் لَمَنِ اشْتَرٰٮهُ நிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதை مَا இல்லை لَهٗ அவருக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنْ خَلَاقٍ‌ؕ எந்த பாக்கியமும் وَلَبِئْسَ இன்னும் திட்டமாக கெட்டது مَا எது شَرَوْا விற்றார்கள் بِهٖۤ அதற்கு பகரமாக اَنْفُسَهُمْ‌ؕ தங்களையே لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே
2:102. அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
2:114
2:114 وَمَنْ اَظْلَمُ مِمَّنْ مَّنَعَ مَسٰجِدَ اللّٰهِ اَنْ يُّذْكَرَ فِيْهَا اسْمُهٗ وَسَعٰـى فِىْ خَرَابِهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ مَا كَانَ لَهُمْ اَنْ يَّدْخُلُوْهَآ اِلَّا خَآٮِٕفِيْنَ ؕ لَهُمْ فِى الدُّنْيَا خِزْىٌ وَّلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ‏
وَمَنْ இன்னும் யார் اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنْ எவனைவிட مَّنَعَ தடுத்தான் مَسٰجِدَ மஸ்ஜிதுகளை اللّٰهِ அல்லாஹ்வுடைய اَنْ يُّذْكَرَ கூறப்படுவதை فِيْهَا அவற்றில் اسْمُهٗ பெயர்/அவனுடைய وَسَعٰـى இன்னும் முயற்சித்தான் فِىْ خَرَابِهَا ؕ பாழாகுவதில் / அவை اُولٰٓٮِٕكَ அவர்கள் مَا كَانَ இருக்கவில்லை لَهُمْ அவர்களுக்கு(அனுமதி) اَنْ يَّدْخُلُوْهَآ அவற்றில் அவர்கள் நுழைய اِلَّا தவிர خَآٮِٕفِيْنَ ؕ பயந்தவர்களாக لَهُمْ அவர்களுக்கு فِى الدُّنْيَا இவ்வுலகில் خِزْىٌ இழிவு وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் عَذَابٌ வேதனை عَظِيْمٌ‏ பெரியது
2:114. இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
2:130
2:130 وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ‌ؕ وَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ‌ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ‏
وَمَنْ இன்னும் யார் يَّرْغَبُ வெறுப்பார் عَنْ விட்டு مِّلَّةِ மார்க்கத்தை اِبْرٰهٖمَ இப்ராஹீமுடைய اِلَّا தவிர مَنْ எவன் سَفِهَ மடையனாக ஆனான் نَفْسَهٗ ؕ அவனே وَلَقَدِ திட்டவட்டமாக اصْطَفَيْنٰهُ தேர்ந்தெடுத்தோம்/அவரை فِى الدُّنْيَا ۚ இவ்வுலகில் وَاِنَّهٗ நிச்சயமாக அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் لَمِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லோரில்தான்
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
2:174
2:174 اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْکِتٰبِ وَ يَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِيْلًا ۙ اُولٰٓٮِٕكَ مَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا يُکَلِّمُهُمُ اللّٰهُ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَکِّيْهِمْ ۖۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَكْتُمُوْنَ மறைக்கிறார்கள் مَآ எவற்றை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் مِنَ الْکِتٰبِ வேதத்தில் وَ يَشْتَرُوْنَ இன்னும் வாங்குகிறார்கள் بِهٖ அதன் மூலம் ثَمَنًا தொகை قَلِيْلًا ۙ சொற்பம் اُولٰٓٮِٕكَ அவர்கள் مَا يَاْكُلُوْنَ அவர்கள் சாப்பிடுவதில்லை فِىْ بُطُوْنِهِمْ தங்கள் வயிறுகளில் اِلَّا தவிர النَّارَ நெருப்பை وَلَا يُکَلِّمُهُمُ இன்னும் அவர்களிடம் பேசமாட்டான் اللّٰهُ அல்லாஹ் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وَلَا يُزَکِّيْهِمْ ۖۚ இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
2:174. எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
2:200
2:200  فَاِذَا قَضَيْتُمْ مَّنَاسِكَکُمْ فَاذْکُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَکُمْ اَوْ اَشَدَّ ذِکْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ‏
فَاِذَا قَضَيْتُمْ நீங்கள் நிறைவேற்றிவிட்டால் مَّنَاسِكَکُمْ உங்கள் ஹஜ்ஜு கடமைகளை فَاذْکُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَذِكْرِكُمْ நீங்கள் நினைவு கூர்ந்ததைப் போல اٰبَآءَکُمْ மூதாதைகளை/உங்கள் اَوْ அல்லது اَشَدَّ கடுமையாக ذِکْرًا ؕ நினைவு கூர்தல் فَمِنَ இன்னும் இருந்து النَّاسِ மக்கள் مَنْ எவர் يَّقُوْلُ கூறுகிறார் رَبَّنَآ எங்கள் இறைவா اٰتِنَا எங்களுக்குத் தா فِى الدُّنْيَا இம்மையில் وَمَا இல்லை لَهٗ அவருக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنْ இருந்து خَلَاقٍ‏ பாக்கியம்
2:200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
2:201
2:201 وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يَّقُوْلُ கூறுகிறார் رَبَّنَآ எங்கள் இறைவா اٰتِنَا எங்களுக்குத் தா فِى الدُّنْيَا இம்மையில் حَسَنَةً அழகியதை وَّفِى الْاٰخِرَةِ இன்னும் மறுமையில் حَسَنَةً அழகியதை وَّ قِنَا இன்னும் காத்துக்கொள் / எங்களை عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‏ (நரக) நெருப்பின்
2:201. இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.